×

சென்னை திருவொற்றியூர் அடுத்த மணலி ஜோதி நகரில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டதால் தண்ணீர் குளம்போல் தேங்குவது தவிர்ப்பு

சென்னை: சென்னை திருவொற்றியூர் அடுத்த மணலி ஜோதி நகரில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டதால் தண்ணீர் குளம்போல் தேங்குவது தவிர்க்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று காலை முதலே விட்டுவிட்டு காண மழை பெய்து வருகின்றது. இதனால் கடந்த ஒரு மாதங்களாக வாட்டி வதைத்த வெப்பம் தணிந்து தற்போது இருள் சூழ்ந்து குளிர் பெரதேசமாக மாறியுள்ளது.

நேற்று காலை முதல் தொடங்கிய மழையானது மத்திய வேளையில் சற்று ஓய்ந்திருந்த நிலையில் நேற்று மாலை மீண்டும் காண மழையாக தொடர்ந்தது, இரவெல்லாம் கொட்டித்தீர்த்த காண மழையினால் சாலையில் அங்கங்கே தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி இருந்துள்ளது. திருவொற்றியூர், எண்ணூர், மணலி, வண்ணாரப்பேட்டை பகுதிகளில் நேற்று இரவு முதலாக தொடங்கிய மழையானது விட்டுவிட்டு மீதமான மழையாக பெய்ய தொடங்கியது.

இன்று காலையிலும் சாராள் மழை தொடருகின்றன. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் மழை நீர் வடிகால் பகுதிகளில் தேங்கிய மழை நீரானது வெளியேற்றப்பட்டு வருகின்றது. திருவொற்றியூர், மணலி விரைவு சாலை ஜோதி நகர் பகுதிகளில் சிறிய மழை என்றாலே குளம்ப்போல் மழை நீர் சாலைகளில் தேங்கி போக்குவரத்துக்கு மிகவும் பாதிப்பு ஏற்படுத்திய நிலையில் தற்போது அப்பகுதியில் துணிதமாக மழை நீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டு மழை நீர் வெளியேற்றப்படுவதால் தற்போது அப்பகுதியில் மழைநீர் தேங்காமல் இயல்பு நிலையில் நிலவுகிறது.

மணலி விரைவு சாலையில் மழை நீர் தேங்காமல் போக்குவரத்து இயல்பாக கடந்து செல்கின்றது. இப்பகுதிகளில் மழை நீர் கால்வாய்கள் அமைக்கும் பணி முழுமையாக நிறைவு பெறாததால் சில இடங்களில் மழை நீர் தேங்கி இருந்தாலும் அதனை உடனடியாக அப்புறவுப்படுத்தப்படும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மாமன்ற கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தற்போது அப்பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

தற்போது ஜேசிபி இயந்திரம் கொண்டு மழை நீர் கால்வாய்களில் செல்லும்படி பணிகள் நடைபெற்று வருகின்றன, இப்பகுதிகளில் சாதாரண நாட்களில் கடந்த ஆண்டுகளில் மழை நீர் குளம்போல் தேங்கியதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு அலகிவந்துள்ளனர். இந்நிலையில் சென்னை முழுவதுமே மாநகரங்கள் முழுவதுமே மழை நீர் கால்வாய்கள் அமைக்கும் பணி நடைப்பெற்று வருகின்றது.

The post சென்னை திருவொற்றியூர் அடுத்த மணலி ஜோதி நகரில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டதால் தண்ணீர் குளம்போல் தேங்குவது தவிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Manali Jothi ,Chennai Thiruvotteur ,Chennai ,Manali Jothi nagar ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...